Advertisement

Responsive Advertisement

இலங்கையர்களுக்கு பேரிடியான செய்தி

 


ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (28) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் ஒரு கிலோக்கிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்தே பாண் உட்பட மேலும் சில வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை (29) முதல் ரோல்ஸ், மரக்கறி ரொட்டி, முட்டை ரொட்டி, பராட்டா உள்ளிட்ட சிறு உணவுப் பண்டங்களின் விலைகளை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,

கொத்து ரொட்டியின் விலையை 10 ரூபாவினாலும் சிறிய உணவுகளுக்கான விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

Post a Comment

0 Comments