Home » » நாடு திரும்புமா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி?

நாடு திரும்புமா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி?

 


தற்போது சிம்பாவே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மீண்டும் நாடு திரும்புவதில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக சிம்பாவே உட்பட சில ஆபிரிக்க நாடுகளின் பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம்.

இந்த நிலைமையில், இலங்கை கிரிக்கெட் அணியை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சுகாதார அமைச்சுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள Omicron என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபு தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள தென் ஆபிரிக்கா, அங்கோலா, போஸ்வானா, மொசாம்பிக், லசதோ, சிம்பாவே, சுவிட்ஸர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இலங்கைக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |