Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான அதிர்ச்சிகர தகவல்

 


இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி கொரோனாவிற்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டது என தெரிவித்துள்ள ஐ.தே.க வின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க  ( Ranil Wickremesinghe )தற்போது ஓய்வூதியம் வழங்கக்கூட அரசாங்கத்திடம் பணம் இல்லையென தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் கொரோனா அல்ல.மாறாக முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்கள் கைவிடப்பட்டமையே தற்போதைய நிலைக்கு காரணம். அரசாங்கம் 2019 இல் தனது பொருளாதார கொள்கையை மாற்றியதை தொடர்ந்தே வீழ்ச்சி ஆரம்பமானது.

உலகின் ஏனைய நாடுகளில் கொரோனாவால் உருவான பிரச்சினைகள் மாத்திரம் காணப்படுகின்றது எங்கள் நாட்டில் கொரோனாவாலும் அரசாங்கத்தினாலும் ஏற்பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு நாணயக்கையிருப்பு நேபாளத்தை விட குறைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments