Advertisement

Responsive Advertisement

மாகாணங்களுக்கு இடையிலான தடை நீங்கியது : பொதுமக்களிடம் விடுக்கும் கோரிக்கை!

 


மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டு தளர்த்தப்பட்டது.


இன்று (31) அதிகாலை 4 மணியுடன் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று (31) முதல் மாகாணங்களுக்கு இடையில் தடையின்றி மக்களுக்கு பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, நாளைய தினம் (01) முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பஸ்களின் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாகவே, பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, முதலாம் திகதி முதல் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது

Post a Comment

0 Comments