மட்டக்களப்பின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி செல்வநகர் சிவா வித்தியாலயத்தின் கணினி அறை உடைக்கப்பட்டு அங்கிருந்த மூன்று கணினிகள் மற்றும் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் புதன்கிழமை (1) இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பாடசாலை அதிபர் இன்று (02) வியாழக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தததையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட பொலிஸார், பொலிஸ் தடவியல் பிரிவை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
0 Comments