Home » » பாடசாலைகள் மீள ஆரம்பம் - எந்தப்பிரிவு முதலில் ஆரம்பிக்கப்படும்?

பாடசாலைகள் மீள ஆரம்பம் - எந்தப்பிரிவு முதலில் ஆரம்பிக்கப்படும்?

 


பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டபோதிலும் எந்தப்பிரிவை ஆரம்பிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என தெரியவருகிறது.

இதன்படி தரம் 7 முதல் தரம் 13 வரை முதலில் திறக்க வேண்டும் என்பது ஒரு பரிந்துரை. 1, 2, 3 மற்றும் 4 ஆம் தரங்களை முதலில் திறக்க வேண்டும் என்ற மற்றொரு திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொரோனா ஒழிப்பு குழுவுடனான அடுத்த கூட்டத்தின் போது பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கனவே சுகாதார துறை தலைவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடலை தொடங்கியுள்ளது.

அடுத்த வாரம் சுகாதார அமைச்சர் இந்தக் குழுவைச் சந்திக்க உள்ளார். மேலும், பாடசாலைகள் திறப்பது தொடர்பாக பல முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |