Home » » சிறுவர்களுக்கு ‘விற்றமின் சி’ கொடுக்க வேண்டாம்: மருத்துவர் நளின் கிதுல்வத்த

சிறுவர்களுக்கு ‘விற்றமின் சி’ கொடுக்க வேண்டாம்: மருத்துவர் நளின் கிதுல்வத்த

 


பெற்றோர் தமது விருப்பப்படி சிறுவர்களுக்கு விற்றமின் சி கொடுப்பது பொருத்தமானதல்ல என கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பாளர் மருத்துவர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.


இந்நாட்களில் சிறுவர்களுக்கு ஏற்றவை என சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான மருந்துகள் குறிப்பிடப்பட்டாலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாது சிறுவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்கக் கூடாது என்றார்.
சிறுவர்களுக்கு தன்னிச்சையாக மருந்து கொடுப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.

“பெற்றோர் நினைப்பது போல் சிறுவர்களுக்கு விற்றமின் சி கொடுக்க வேண்டாம் என நாம் சொல்கிறோம். ஏனெனில் சிறுவர்களுக்கு எவ்வளவு விற்றமின் சி கொடுக்க வேண்டும் என்பது யாருக்கும் தெரியாது. காய்ச்சல் இருந்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவு பரசிட்டமோல் கொடுக்கவும். அதற்கு மேல் இருந்தால் மருத்துவரிடம் சென்று அவரது அறிவுரைப்படி கொடுக்கக்கூடிய மருந்தை மட்டுமே கொடுங்கள்” என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |