மட்டு பிள்ளையாரடியில் இன்று காலை பாரிய விபத்து...!!
மட்டக்களப்பு- பிள்ளையாரடி பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் கயஸ்(வான்) ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த பேருந்தினை அதே திசையில் வந்த கயஸ்(வான்) ரக வாகனம் முந்தி செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையாரடி ஆலயத்திற்கு முன்னாள் இடம்பெற்ற குறித்த விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: