Home » » “உடனடியாக நாட்டை முடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” முக்கிய தரப்பிலிருந்து வந்த அறிவிப்பு

“உடனடியாக நாட்டை முடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” முக்கிய தரப்பிலிருந்து வந்த அறிவிப்பு

 


கொரோனாவின் "டெல்டா" திரிபு நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருவதால், நாட்டை மூடிவிட்டு, இந்த பேரழிவு தரும் தொற்றுநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் அரசாங்கத்திற்கு ஒரு வலுவான கோரிக்கையை விடுக்கின்றனர்.

நாடு முழுவதும் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பயணக் கட்டுப்பாடுகளை மட்டும் விதிப்பதன் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியாது.

ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதையும் மருத்துவ சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதுவரை, சிறப்பு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள் மன்றம், இலங்கை மருத்துவ சங்கம், செவிலியர்கள் சங்கம் மற்றும் அரசு செவிலியர்கள் சங்கம் ஆகியவை நாட்டை உடனடியாக மூடவும் மற்றும் பரவலை கட்டுப்படுத்தவும் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

கொரோனா தொற்றுநோய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால் சுகாதாரத் திறனைப் பராமரிப்பது கடினமாக இருக்கலாம் என்றும் சுகாதாரத் துறை எச்சரிக்கிறது.

கடந்த இரண்டு நாட்களில், கலிகமுவ சுகாதார மருத்துவ அதிகாரி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

அதே நேரத்தில் வவுனியா மருத்துவமனையில் இரண்டு வைத்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே நாட்டை முழுமையாக முடக்குமாறு முக்கிய தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |