Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நடனக் கலைஞர்கள் 45 பேருக்கு கொரோனா


 கண்டி- எசல பெரஹெரவில் கலந்துகொண்ட நடனக் கலைஞர்கள் 45 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இவர்கள் கதிர்காமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நடனக் கலைஞர்களும் என்றும் இந்த குழுவில் 76 நடனக் கலைஞர்கள் காணப்படுகின்ற போதிலும் அவர்களுள் 45 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (21) கண்டியில் நடைபெற்ற ரந்தோலி ஊர்வலத்தின் பின்னர், அவர்களுக்கு என்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதுடன், இதில் 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் உடனடியாக பெரஹெரவில் இருந்து விலக்கப்பட்டதுடன், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments