மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடையை மீறுபவர்களைக் கண்டறியும் வகையில் இன்று காலை விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
கொரோனா அச்சம் காரணமாக அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளை விட்டு அநாவசியமாக வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணத்தடையை மீறி செயற்படுபவர்களைக் கண்டறியும் வகையில் விசேட சோதனைகளில் போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபட்டனர்.
இதன்போது, அனுமதியின்றி வீதிகளில் நடமாடுவோர் எச்சரிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவுத்தப்பட்டனர்.
0 comments: