மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக திரு.என்.சந்திரகுமார் அவர்கள் இன்று கடமையைப் பொறுப்பேற்றார்.
இன்று (09.06.2021) காலை மு.ப 10.00 மணியளவில் இராமகிஸ்ன மிஷன் பொறுப்பாளர்களிடம் ஆசிபெற்று தனது கடமையைப் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.S.குலேந்திரகுமார், கோட்டக் கல்விப்பணிப்பாளர் திருமதி. ரவிச்சந்திரா, பழைய அதிபர் திரு.மதிமோகன், பாடசாலையின் முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள், பகுதித் தலைவர்கள், பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் சமூக இடைவெளியைக் கருத்தில் கொண்டு பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: