Home » » அதிரடியாக களம் இறங்கினார் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் சுகுணன்

அதிரடியாக களம் இறங்கினார் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் சுகுணன்

 


அதிரடியாக களம் இறங்கினார் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் சுகுணன்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுனன் தலைமையிலான குழுவினர் நேற்று (16) காலை முதல் பெரியநீலாவனை தொடக்கம் சாய்ந்தமருது வரையிலான பகுதியில் உள்ள பிரதான வீதிகளில் பயணம் செய்த வாகனங்களை பரிசோதனை செய்து உரிய அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்தவர்களுக்கு பி.சி ஆர் பரிசோதனை செய்ததுடன் குறித்த சிலருக்கு வழக்கு பதிவும் செய்தார்

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று தீவீரமடைவதை தொடர்ந்து அதனை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அதிரடி நடவடிக்கைகள் இனி தொடர்ந்தேர்ச்சையாக கல்முனை பிராந்தியம் முழுவதுமாக நடைபெறவுள்ளது. 


இத் திடீர் கண்காணிப்பு நடவடிக்கையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி உட்பட பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |