Home » » நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் - வெளிவந்த உள்வீட்டு தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் - வெளிவந்த உள்வீட்டு தகவல்

 


புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்குவதற்கான அமைச்சரவை முன்மொழிவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் செய்யப்படவில்லை என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தா யாபா பண்டார தெரிவித்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனை முந்தைய யோசனையின் அடிப்படையில் இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், சில புதிய எம்.பி.க்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம் இல்லை, இதனால் அவர்கள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டி உள்ளது. சில எம்.பி.க்கள் பஸ்ஸில் பயணம் செய்கிறார்கள் என்றும், அத்தகைய மக்கள் பிரதிநிதிகள் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, தற்போது அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை வழங்குவது பொருத்தமானது, என்றார். இருப்பினும், நாட்டின் நெருக்கடி நிலைமை காரணமாக, சலுகைகள் பெற வேண்டிய அவசியமில்லை, அரசியல்வாதிகள் மக்களை விட நாட்டிற்காக அதிக தியாகங்களை செய்ய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |