Home » » கொழும்பு வாழ் மக்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கொழும்பு வாழ் மக்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

 


கொழும்பில் வசிக்கும் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அதாவது 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 45 வீதமானோர் தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

அத்துடன் சைனோபாம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டவர்களுக்கு அவர்களது கையடக்க தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் இரண்டாவது டோஸ் பெறும் திகதி மற்றும் நேரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அனுப்பப்படும் என்றும் இரண்டாவது டோஸ் முதல் டோஸ் போட்ட அதே இடத்தில் கிடைக்கும் என்றும் மருத்துவர் ருவான் விஜயமுனி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நாளில் இரண்டாவது டோஸ் எடுக்க முடியாதவர்களுக்கு இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |