Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி!


 கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.


கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்னுரிமைக்கு அமைய இன்று மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கான தேவைப்பாடுகள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்பு வீதம் அதிகரித்துச் செல்லும் நிலையில் சுற்று நிரூபத்திற்கு அமைய இன்று இந்த கொரோனாத் தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட்டன.

எவ்வாறாயினும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார துறையினரால் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments