Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நேற்று மாத்திரம் 48பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 1656ஆக அதிகரிப்பு...!!

 


நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.


இந்த மரணங்கள் கடந்த மே 11ஆம் திகதி முதல் ஜூன் மூன்றாம் திகதிவரை நிகழ்ந்துள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில், 25 ஆண்களும் 23 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 656ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments