Advertisement

Responsive Advertisement

இன்றும் இரண்டாயிரத்தை கடந்தது கொவிட் தொற்று!!

 


இலங்கையில் மேலும் 1,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 2,249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 135,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,145 பேர் இன்று (13) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 108,802 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 868 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments