Home » » மட்டக்களப்பில் பல்கலைக்கழக விடுத்திக்குள் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது மாணவன் கைது!!

மட்டக்களப்பில் பல்கலைக்கழக விடுத்திக்குள் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது மாணவன் கைது!!

 


பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.


குறித்த பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்றுவரும் மாணவியை சம்பவதினமான நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஆண்கள் விடுதிக்கும் பெண்கள் விடுதிக்கும் இடையிலுள்ள பகுதில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மாணவனை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்

இதில் கைது செய்யப்பட்ட மாணவன் விடுதியில் தங்கிருந்து வர்த்தகப்பிரிவில் கல்விகற்றுவரும் அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |