அரிய வகை ஆந்தையொன்று வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் புத்தளம் – மணல்தீவு பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.
புத்தளம் – மணல்தீவு பகுதியில் ஆந்தையொன்று மரத்திலிருந்து கீழே வீழ்வதை அவதானித்த பிரதேசவாசி ஒருவர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஆந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.
ஆந்தை சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட ஆந்தையை நிக்கவரெட்டிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
0 comments: