Advertisement

Responsive Advertisement

சகல முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனா பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம்!!

 


இலங்கையிலுள்ள சகல முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனா பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனா பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனியார் வகுப்புகளுக்கும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments