இவ்வருடத்துக்கான க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சர் அறிவித்துள்ளார்.
அவ்வாறே ஒக்டோபர் 3 ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments