(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டு கழகத்தின் முப்பெரும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர்களுமான மூவர் வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
இக் கழகத்தின் சிரேஷ்ட கிரிக்கெட் வீரரும், சகலதுறை விளையாட்டு வீரரும், மாவடிப்பள்ளி அல் - அஷ்ரப் மகா வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருமான ஜே.ஏ.றில்பான் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட" C" தர நடுவர்களுக்கான எழுத்து மூலப் பரீட்சையில் 88 புள்ளிகளைப் பெற்றதுடன் செயன்முறைப் பரீட்சையில் 78 புள்ளிகளைப் பெற்றும், அதே போன்று இக் கழகத்தின் சிரேஷ்ட மெய்வல்லுனரும் கல்முனை அல் - மிஸ்பா மகா வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருமான எம்.ஜே.எம்.முபீத் எழுத்து மூலப் பரீட்சையில் 84 புள்ளிகளைப் பெற்றதுடன் செயன்முறைப் பரீட்சையில் 78 புள்ளிகளைப் பெற்றும், .
இக் கழகத்தின் உதைபந்தாட்ட வீரரும் சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்தின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருமான எம்.எஸ்.எம்.நுஸ்கி எழுத்து மூலப் பரீட்சையில் 84 புள்ளிகளைப் பெற்றதுடன் செயன்முறைப் பரீட்சையில் 80 புள்ளிகளைப் பெற்றும் சித்தியடைந்துள்ளனர்.
வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான எழுத்து மூலப் பரீட்சை சம்மாந்துறை மற்றும் கிண்ணியாவில் நடைபெற்றதுடன் செயன்முறைப் பரீட்சை வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதனடிப்படையில் இவர்கள் அங்கீகாரம் பெற்ற இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளன வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர்களாக தெரிவாகியுள்ளதாக கழகத்தின் செயலாளர் அலியார் பைஸர் தெரிவித்தார்
0 comments: