நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை மிகவும் துணிச்சலாக திருடிச் சென்றவர் தொடர்பான தகவலை அளிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜா எல பகுதியிலேயே இந்த சம்பவம் இன்று ஞாயழற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. கராஜ் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
வெளியான சி சி ரி வி காணொளிகளின் அடிப்படையில் குறித்த நபரை தெரிந்தவர்கள் 119 அல்லது 0718591603 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
0 comments: