Home » » கல்முனையில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

கல்முனையில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

  


(எமது நிருபர் செ.துஜியந்தன்)


கல்முனைப் பிரதேசத்தில் சமீபகாலமாக அதிகரித்துள்ள திருட்டுச் சம்பவங்களல் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கல்முனை வட்டவிதானை வீதியில் உள்ள ஆசிரியர் ஒருவரது வீடொன்றினுள் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்;த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளனர்.
நேற்று (7) அதிகாலை மூன்று மணியளவில் வீட்டுக்கூரையினை உடைத்துக்கொண்டு உள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த அலுமாரிகள் தளபாடங்களை ஆராய்ந்துள்ளனர். சத்தம் கேட்டு அருகிலுள்ள அறையில் உறங்கிக்கொண்டிருந்த வீட்டுரிமையாளர் எழுந்து பார்க்கின்றபோது வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது பி.டி.டபிள்யூ-0606 இலக்கம் கொண்ட ஹோண்டா மோட்டார் சைக்கிளை திருச்சென்றுள்ளனர்.




குறித்த திருடனை பிடிப்பதற்காக வீட்டுரிமையாளர் விரட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வீதியின் ஓரங்களில் பதுங்கிநின்ற ஏனைய நான்கு பேர் வாள், கத்தி சகிதம்  வீட்டு உரிமையாளரோடு சண்டையில் ஈடுபட்டு வாய்த்தர்க்கம் புரிந்த நிலையில் அனைவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். குறித்த ஆசிரியரது மோட்டார் சைக்கிளை திருடன் திருடிச் செல்வதும் திருடனைப் பிடிப்பதற்காக வீட்டுரிமையாளர் துரத்திச் செல்லும் காட்சி அருகிலுள்ள சீ.சீ.ரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டுரிமையாளரான ஆசிரியர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கல்முனைப் பிரதேசத்தில் சமீபகாலமாக வீடுகளுக்குள் புகுந்து துணிகர கொள்ளைச்; சம்பவங்களில் ஒரு கும்பல்ஈடுபட்டுவருகின்றமை தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |