Home » » 05 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 1,834 பேர் கைது!

05 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 1,834 பேர் கைது!

 


மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக ஏப்ரல் 13 முதல் இன்று காலை 6.00 மணிவரையான காலப் பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையில் 1,834 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைதுசெய்வதற்கான சிறப்பு நடவடிக்கை இன்று நண்பகல் முதல் நாளை காலை 6 மணிவரை செயல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் இடங்களில் செயல்படுத்தப்படும்.

இதேவேளை பண்டிகைக் காலத்தில் மது போதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் விசேட தேடுதல் நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும். என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மது போதையில் வாகனத்தை செலுத்துவோருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது. இவர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |