Advertisement

Responsive Advertisement

இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பினால் பயனாளிகளுக்கு 02ம் கட்ட குழாய் நீர் கிணறுகள் வழங்கி வைப்பு

 



(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

ஆசியா இன்டர்நேஷனல் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனியின் பூரண அனுசாரணையில் மிகவும் தேவைப்பாடாக காணப்பட்ட சாய்ந்தமருது, கல்முனைக்குடி பிரதேச பொது மக்களின் குடிநீர் பிரச்சினை மற்றும் நீர்ப்பற்றாக்குறையினையும் நிவர்த்தி செய்யுமுகமாகவும் இவ் குழாய் நீர் கிணறுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வு  இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பின் தலைவர் முஸ்தபா முபாறக் தலைமையில் நடைபெற்றது. 

இன் நிகழ்வில் இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பின் பிரதி அமைப்பாளர் ஹப்ராத், உயர்பீட உறுப்பினர்களான பாஸித், முபாறக்,  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments