Home » » மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளிகளுக்கு கைகழுவுவதற்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளிகளுக்கு கைகழுவுவதற்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு

 


கொவிட் 19 பரவலைத் தடுக்கும் பொருட்டு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக கிழக்கு மாகாணத்திலுள்ள 17 வலயங்களிலுமுள்ள முன்பள்ளிகளுக்கு கைகழுவுவதற்கான  உபகரணங்கள் மாகாணக் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டு வருகின்றது. 

இதனடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகளுக்கு கைகழுவுவதற்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது. இம்முன்பள்ளிகளுக்கான கைகழுவும் உபகரணங்களை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் திரு.அருணாசலம் சுரேஸ்குமார், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகக் கணக்காளர் திருமதி.புஸ்பகாந்தி சுகிஸ்வரன் மற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.முத்துராஜா புவிராஜா ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இச்செயற்றிட்டத்திற்கு யுனிசெப் நிறுவனம் அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |