Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பொத்துவிலிலும் ஆரம்பமானது உணவு தவிர்ப்பு போராட்டம்! கலையரசன் உள்ளிட்டோருக்கு நீதிமன்றின் உத்தரவு

 


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று காலை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் தொடங்கிய அகிம்சை வழியிலான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கல்முனை திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு இன்று காலை பொத்துவில் பொலிசார் நீதிமன்ற தடை உத்தரவை வழங்கி உள்ளனர்.

இதேநேரம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுழற்சி முறையிலான போராட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி, தாமோதரன் பிரதீபன் உள்ளிட்டோருடன் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments