Home » » போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் -சாணக்கியன்!

போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் -சாணக்கியன்!

 


போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வடகிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில் இருந்துவந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பில் பொலிஸ் நிலையங்கள் ஊடாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த வாக்குமூலங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று முற்பகல் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு வருகைதந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர்.

வடக்கில் வல்வெட்டித்துறை, கிளிநொச்சி, மாங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் கிழக்கில் வாழைச்சேனை, மூதூர், காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து வருகைதந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின்போது நீதிமன்ற கட்டளை மீறப்பட்டதா, பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதா, கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதா போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலங்கள் புதிவுசெய்யப்பட்டன.

முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையில் இவ்வாறு வாக்குமூலங்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |