Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழ். பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் முதன்முறையாக மனம் திறந்தார் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ்


யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் போர் நினைவுச்சின்னம் கட்ட பல்கலைக்கழகத்தில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர்,

எந்தவொரு நினைவுச்சின்னத்தையும் சிலையையும் பல்கலைக்கழகத்தின் முன் அனுமதியின்றி கட்டவோ, காட்சிப்படுத்தவோ முடியாது, இது பல்கலைக்கழக அமைப்பில் உள்ள சட்டமாகும்.

எனவே, இந்த நினைவுச்சின்னத்தை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அகற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆணையம் முடிவு செய்தது என்றார்.

நினைவுச்சின்னம் இடிக்கப்படுவதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. இதில் பல்கலைக்கழக சட்டம் மட்டுமே உள்ளது என்று அவர் கூறினார்.யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குனராஜா இன்று பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்ததாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments