Home » » பல மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யும் சாத்தியம்

பல மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யும் சாத்தியம்

 


வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதை கூறியுள்ளது.

கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, மாத்தளை, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 50 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் தொிவித்துள்ளது.

மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மாவட்டங்களிலும் இன்று பி.ப. 1 மணியின் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் அத்திணைக்களம் எதிர்வுகூறுகின்றது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |