Home » » சற்று முன்னர் முற்றாக முடங்கியது வவுனியா பசார் வீதி! இராணுவம் குவிப்பு

சற்று முன்னர் முற்றாக முடங்கியது வவுனியா பசார் வீதி! இராணுவம் குவிப்பு

 


வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள் கிழமை கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையில் இருந்து பட்டானிசூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து பட்டானிசூர் பகுதி கடந்த ஒருவாரமாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. இதேவேளை பட்டானிசூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் உள்ள அனேகமான வியாபார நிலையங்களை நடத்திவருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

அதனை கருத்தில் கொண்டு வவுனியா பசார் வீதியின் ஒரு பகுதி, தர்மலிங்கம் வீதி, சந்தைவீதிகள் இராணுவம் மற்றும் பொலிசாரால் நேற்று முன்தினம் முற்றாக முடக்கப்பட்டு, அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் முதற்கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டது.

அதன் முடிவுகள் இன்று வெளியாகியது அவர்களில் 54 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் பசார் வீதி மற்றும் தர்மலிங்கம் வீதி என்பன சற்று முன்னர் முற்றாக முடக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதியாகியவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |