Home »
எமது பகுதிச் செய்திகள்
» கல்முனை பிரதேச மக்கள் தங்களை சுயதனிமைப்படுத்திக் கொண்டனர்...!!
கல்முனை பிரதேச மக்கள் தங்களை சுயதனிமைப்படுத்திக் கொண்டனர்...!!
(சர்ஜுன் லாபீர்)கல்முனை கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் இன்றைய வேண்டுகோளுக்கிணங்க கல்முனை செய்லான் வீதி முதல் சாஹிரா கல்லூரி வீதி வரை இன்று(2) பிற்பகல் 6.00 மணியில் இருந்து தங்களை சுய தனினைப்படுத்திக் கொண்டதை காணக்கூடியதாக உள்ளது.
இப் பிரதேசத்தில் உள்ள சகல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டும்,வீதி போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
இதனூடாக மக்கள் கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் வேண்டுகோளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்கள் வழங்கி இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: