Advertisement

Responsive Advertisement

புனானையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ! 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி

 


பொலன்னறுவை - மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதியில் இன்று (29) தனியார் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று (29) காலை 6.30 மணிக்கு புனானைப் பிரதேசத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது வேக கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பேருந்தில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments