Home » » நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு..!!

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு..!!

 




கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்றும் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது,வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும் இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |