Home » » அக்கரைப்பற்று மாநகராட்சி தொடர்பில் முதல்வரின் முக்கிய அறிவிப்பு!!

அக்கரைப்பற்று மாநகராட்சி தொடர்பில் முதல்வரின் முக்கிய அறிவிப்பு!!

 


நூருள் ஹுதா உமர்

கடந்த 19 நாட்களாக எமது மாநகரம் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல் நிலையில் இருப்பதாலும் தொற்றின் தாக்கம் குறைந்திருந்தாலும் தொடர்ந்தும் புதிய தொற்றாளர்கள் சில பிரதேசங்களில் கண்டறியப்படுவதால்
எமது பிரதேசத்தின் நன்மை கருதியும் மக்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டும் நேற்று அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாகவும்
இன்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாகவும் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை மாநகர மக்களுக்கு அறியத்தருகின்றோம் என
அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தெரிவித்துள்ளார்.

அத்தீர்மானங்களாக அக்கரைப்பற்று 14 (காதிரியா வடக்கு), நகர் பிரிவு - 3 அக்கரைப்பற்று - 5, இவற்றுடன் சுகாதார அமைச்சின் அறிவித்தலுக்கு மேலதிகமாக தொற்றின்
நிலைமையையும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு
அக்கரைப்பற்று பிரதான சந்தை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் முழுமையாக தனிமைப்படுத்தல் பிரதேசமாக தொடரும்.

நாளை முதல் ஏனைய பிரதேசங்களில் இருப்பவர்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு தங்களுடைய பணிகளில் மாலை 6 மணி வரை மட்டுமே ஈடுபடலாம்.

அத்தியவசிய தேவைகளுக்காக விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள மரக்கறி கடைகள் , மற்றும் அத்தியசிய நுகர்வோர் சில்லறைக் கடைகள் மட்டுபடுத்தப்பட்டளவில் மாலை 6 மணிவரை திறக்கலாம். பாமசிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து விற்பனை நிலையங்களும், மறு அறிவித்தல் வரும் வரை மூடியே இருக்கும். ஹோட்டல்கள் பொதுமக்களுக்கு முழுமையாக மூடப்பட்டு உணவுகளை கொண்டு செல்ல மட்டும் வழங்குவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படும்

கூட்டம் கூடுதல், நிகழ்வுகளை நடாத்துதல் என்பன முற்றாக தடைசெய்யப்படும். பள்ளிவாசல்களை திறப்பது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும். அக்கரைப்பற்று பொலிஸ் எல்லையை கடந்து முறையான அனுமதி இல்லாமல் பிரயாணம் செய்ய தொடர்ந்தும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

அத்துடன் விவசாயிகள் ஏற்கனவே உள்ள நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதை அறியத்தருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் மாநகர மக்கள் தொடர்சியாக சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றி
எமது மூத்த பிரஜைகள், நோயாளிகள், குழந்தைகள் மீது அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டுகிறோம். இத்தனை நாட்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு மத்தியில் ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்தும் உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்கின்றோம் என தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |