இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இன்று காலை 6 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் அம்பாறை மாவட்டம் -அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அக்கரைப்பற்று 5, அக்கரைப்பற்று 14 மற்றும் சந்தை பிரிவு 3 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவில் பாலமுனை 1, ஒலுவில் 2 மற்றும் அட்டாளைச்சேனை 8 ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில் ஆலையடிவேம்பு 8/1, ஆலையடிவேம்பு 8/3 மற்றும் ஆலையடிவேம்பு 9 ஆகிய பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, மொணராகலை மாவட்டத்தின் அலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: