தலவாகலை நகரில் உள்ள தங்க ஆபாரணங்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் ஒரு இலட்சம் ரூபா பெருமதியான தங்க மாலையினை கொள்ளையிட்டு சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கு தலவாகலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை மூன்று மணியளவில் குறித்த விற்பனை நிலையத்திற்கு வந்த நபர் தங்க மாலை ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக வந்து கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளார். குறித்த சந்தேக நபர் முக கவசம் அணிந்து வந்து மாலையினை கொள்வனவு செய்வது போல் பரிசீலனை செய்து குறித்த தங்கமாலையினை நிலத்தில் போட்விட்டு பிறகு அதனை எடுத்து அவர் அணிந்திருந்த காற்சட்டையின் பையினுள் மறைக்கும் காட்சி குறித்த நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் தலவாகலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்தமையால் சி.சி.டிவி.கேமராவின் உதவியோடு குறித்த சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தலவாகலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: