Home » » 42 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்...!!

42 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்...!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கண்டி நகரில் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் சிலவற்றின் கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, கண்டி நகரில் அமைந்துள்ள 42 பாடசாலைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்ச நிலை காரணமாக, கண்டி நகரில் மூடப்பட்டிருந்த 45 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 7ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கண்டி நகரில் கொரோனா தொற்றாளர்கள் மேலும் அடையாளம் காணப்பட்ட நிலையில், குறித்த பாடசாலைகளை இன்று வரை தொடர்ந்தும் மூடுமாறு மத்தியமாகாண ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார்.

இதற்கமைய, தொடர்ந்தும் மூடப்பட்ட 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |