Home » » பெண் வைத்தியருக்கு கொரோனா; திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவி

பெண் வைத்தியருக்கு கொரோனா; திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவி

 


அவிசாவளை அரசாங்க வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவிசாவளையிலுள்ள மாவட்ட அரசாங்க வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்கே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

மேற்படி பெண் வைத்தியர் ஏக்கல பகுதியில் வசிப்பவர் என்றும் இதனால் வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, எம்பிலிப்பிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையின் மாணவி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் எம்பிலிபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அந்த மாணவிக்கு கொரோனா வைரஸ் தொடர்பான எந்தவித அறிகுறிகளும் காணப்படவில்லையென டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |