Advertisement

Responsive Advertisement

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள்- வளிமண்டலவியல் திணைக்களம்!!

 


இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழைய அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல், மற்றும் மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments