Home » » சடுதியாக அதிகரிக்கும் கொரோனா! மேலும் ஐந்து மீன் கடைகளுக்கு பூட்டு

சடுதியாக அதிகரிக்கும் கொரோனா! மேலும் ஐந்து மீன் கடைகளுக்கு பூட்டு

 


கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் நகரில் இயங்கி வந்த ஐந்து மீன் கடைகள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக டிக்கோயா நகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் தலைவரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் பிரதான மீன் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் இருவர் கொழும்பு பேலியகொட மொத்த மீன் விற்பனை நிலையத்தில் மீன் கொள்வனவு செய்து வந்துள்ளதனை தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்பு கருதி இந்த கடைகள் மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சென்று வந்த இருவரும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பதாகவே தனிமைப்படுத்தப்பட்டதாகவும், ஏனைய மீன் கடைகளில் பணிபுரியும் 12 பேர் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,

கொழும்பு சென்று வந்த இருவருக்கு இன்று (23) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |