Advertisement

Responsive Advertisement

தென்னிலங்கையில் பதற்றம்! சிறுவன் பலி- ஐவர் படுகாயம்

 


தென் பகுதியில் ஹம்பாந்தோட்டை - வீரகெட்டியவில் இரண்டு குழுக்களிடையே நேற்றிரவு பாரிய மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் 17 வயதான சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இவர்களில் ஐந்துபேர் படுகாயமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலு. விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments