மினுவங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் கொத்தணியில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதில் 32 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்கள் என்றும் ஏனைய 17 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இதுவரையில் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,446ஆக அதிகரித்துள்ளது.
0 Comments