Home » » எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் குறையும் வாய்ப்பு!

எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் குறையும் வாய்ப்பு!

 


எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் குறையக்கூடும் என்று தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையம் கூறியுள்ளது. இதேவேளை நாட்டில் தங்க இருப்புக்கு பஞ்சமில்லை என்றும் தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஹர்ஷா இலுக்பிட்டிய தெரிவித்தார்.


நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 10 டொன் தங்கம் தேவைப்படுகிறது, தற்போது நாட்டில் தங்கத்தின் தேவை உள்ளது, எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது 22 கரட் தங்கத்தின் சந்தை மதிப்பு 90,000 முதல் 92,000 ரூபாய் வரை உள்ளது.உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (31.1034768 கிராம் அதாவது சுமார் 4 பவுன்) 21 ஆம் திகதியுடன் ஒப்பிடும்போது 23 ஆம் திகதிக்குள் 66 அமெரிக்க டொலர் குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (31.1034768 கிராம்) ரூ. 9712.317 கொழும்பு தங்க சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (31.1034768 கிராம்) ரூ. 7775.869 என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |