Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு உள்ளிட்ட பல இடங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

 


மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழைபெய்யும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லி மிற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் மழைபெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் மற்றும் கடும் காற்றினால் ஏற்படும் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments