Home » » தூக்கில் தொங்கி உயிரிழந்த இளைஞன்!- அதிர்ச்சியில் உறைந்த உறவினர்!!

தூக்கில் தொங்கி உயிரிழந்த இளைஞன்!- அதிர்ச்சியில் உறைந்த உறவினர்!!

 




வவுனியா கூமாங்குளம் கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

தந்தையுடன் குறித்த இளைஞனும் வீட்டில் இருந்துள்ளார். தாயார் அயலவரின் வீட்டிற்கு சென்றிருந்தார். தந்தை காலை 7 மணியளவில் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளார். பின்னர் 7.30 மணியளவில் குறித்த இளைஞனின் தாயார் வீட்டிற்கு வருகை தந்த சமயத்தின் வீட்டின் அறையினுள் அவ் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததனை அவதானித்துள்ளார்.

அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மற்றும் பண்டாரிக்குளம் பொலிஸாருடன், கிராம சேவையாளரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 26வயதுடைய தங்கவேல் சிவகுமார் என்ற இளம் குடும்பத்தவரேயாகும். குறித்த இளைஞர் திருமணம் முடித்து ஒருவருடமாகிய நிலையில் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |