Home » » அமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

 தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பதற்காகவும், அபிவிருத்திகளை செய்வதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,

கிழக்கு தமிழ் மக்களின் நலன்கருதி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டுமென இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அமோக வெற்றியீட்டியதை தொடர்ந்தே அவர் இதனை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |