Home » » மீறினால் கைது - செஞ்சோலைப் படுகொலையை நினைவுகூர தடை

மீறினால் கைது - செஞ்சோலைப் படுகொலையை நினைவுகூர தடை

 

செஞ்சோலைப் படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாதென புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருடந்தோறும் வள்ளிபுனம் இடைக்கட்டுச் சந்தியில் நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்தப்படும். அதற்கமைய இம்முறையும் நாளை - காலை நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே புதுக்குடியிருப்பு பொலிஸார் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாதென தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவை மீறி நிகழ்வை நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முல்லைத்தீவு - வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது ஸ்ரீலங்கா விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |